Home இலங்கை எம்மை யாரும் கவனிக்கவில்லை ! இத்தாவில் பிரதேச மக்கள்…

எம்மை யாரும் கவனிக்கவில்லை ! இத்தாவில் பிரதேச மக்கள்…

by admin

கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட கடும் காற்றினால் பல்வேறுபட்ட சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பச்சிலைப்பள்ளியின் இத்தாவில் கிராமத்தில் புதிதாக மீள்குடியேறம் செய்யப்பட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் . இது தொடர்பாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளரிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற தவிசாளரும் குழுவினரும், பிரதேச  அமைப்புக்களுடனும், அரச அதிகாரிகளுடனும் தொடர்பினை ஏற்ப்படுத்தி நிலைமையை தெரியப்படுத்தியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் அவ்விடத்துக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். இங்கு மக்கள் தமக்கு உடனடியாக நிரந்தர வீடு வேண்டும் எனவும் அதுவும் வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்படும் குறைந்த தொகை வீடு வேண்டாம் எனவும் கூறியிருந்தனர் .

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More