Home இலங்கை வடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் புத்தர் சிலைகள்….

வடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் புத்தர் சிலைகள்….

by admin


வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் புத்த சிலைகளை நிர்மாணிக்கப்பட உள்ளதாக, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தினம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 94 ஆவது பிறந்த தினத்தையொட்டி நாடளாவிய ரீதியில் மாபெரும் புத்தர் சிலைகளை நிர்மாணிக்கவுள்ளதாக தெரிவித்தார். இதன்படி வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும்  முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்திட்டம்,  எதிர்வரும் 23 ஆம் திகதி  அனுராதபுரத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

Spread the love

Related News

1 comment

Logeswaran June 13, 2018 - 11:05 pm

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிவ பூமியாகிய இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் அழிக்கப்பட்ட சிவன் கோயில்களை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More