Home இலங்கை உடைகள் கிழிந்தன – தாக்குதல் காயங்கள் – துப்பாக்கிச் சூடு – அதிக குருதி போக்கே மரணத்திற்கு காரணம்..

உடைகள் கிழிந்தன – தாக்குதல் காயங்கள் – துப்பாக்கிச் சூடு – அதிக குருதி போக்கே மரணத்திற்கு காரணம்..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


காவற்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞனின் உடலில் இருந்து அதிகளவான குருதி வெளியேறியமையே உயிரிழப்புக்கு காரணம் எனவும் , சம்பவம் நடைபெற்று 15 நிமிடங்களுக்குள் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தால் உயிரை காப்பாற்ற முடிந்திருக்கும் என சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனையின் போது தெரிவிக்கப்பட்டது.

மல்லாகம் சகாய மாதா தேவாலயம் முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞனின் உடல் கூற்று பரிசோதனையை யாழ். போதனா வைத்திய சாலையில் சட்டவைத்திய அதிகாரி எஸ்.மயூரதன் மேற்கொண்டார்.

இளைஞனின் முதுகு பக்கத்தால் சென்ற துப்பாக்கி சன்னம் அவரது இடது பக்க நெஞ்சு பகுதியால் வெளியேறியுள்ளது. இன்னுமொரு சன்னம் தோள் மூட்டு பகுதியால் சென்றுள்ளது. இருதயத்தில் எந்தவொரு பாதிப்பும் இல்லை.

நுரையீரல் பகுதியில் இருந்து அதிகளவான குருதி வெளியேறியமையால் மரணம் சம்பவத்துள்ளது. சம்பவம் நடைபெற்று 15 நிமிடங்களுக்குள் அவரை வைத்திய சாலையில் அனுமதித்திருந்தால் காப்பற்றி இருக்க முடியும்.

அத்துடன் இளைஞனின் முகத்தில் இரண்டு இடங்களில் பொல்லுகள் தாக்கப்பட்டமைக்கான காயங்கள் உள்ளன. மற்றும் அவரது உடைகளும் கிழிந்திருந்தன. என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த இளைஞனின் உடல்கூற்று பரிசோதனை அறிக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பாரபடுத்தபடும். எனவும் தெரிவிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More