Home இலங்கை தெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி

தெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி

by admin


தெற்கு அதிவேக வீதியில் குருந்து கஹஹெதெக்ம பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . கொட்டாவையிலிருந்து காலி நோக்கி புறப்பட்ட வான் இயந்திரகோளாறு காரணமாக வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதி ஏற்பட்ட இந்த விபத்தில் வானில் பயணித்த நான்கு அவுஸ்திரேலிய பிரஜைகளும் லொறியின் சாரதியும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 37 வயதுடைய தாயும் நான்கு வயதுடைய அவருடைய மகளும் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த ஏனைய மூவரும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More