Home இந்தியா ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவு :

ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவு :

by admin


பிரபல இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய புலனாய்வு முகாமை மற்றும் அமுலாக்கத்துறைக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பங்காளதேசத்தின் டாக்கா பகுதியில் நடைபெற்ற தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலுக்கு ஜாகிர் நாயக்கின் பேச்சு தூண்டுகோலாக அமைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டடிருந்தமை தொடர்பாக அவரை கண்காணிக்கும்படி பங்காளதேச அரசு இந்திய அரசினை கேட்டுக்கொண்டது.

அதன்படி, ஜாகிர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டியதாக தேசிய புலனாய்வு முகமை அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.  ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு சொந்தமான 10 இடங்களிலும் சோதனை நடைபெற்று, அவரது இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது.

எனினும் இந்த குற்றசாட்டுகளை மறுத்து வருகின்ற ஜாகிர் நாயக் தற்போது தலைமறைவாக உள்ளதுடன்    தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறும், ரத்து செய்யப்பட்ட கடவுச்சீட்டு போன்றவற்றை மீண்டும் அளிக்க உத்தரவிடுமாறும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், ஜாகிர் நாயக் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகள் குறித்து, தேசிய புலனாய்வு முகாமை மற்றும் அமுலாக்கத்துறையிடம், அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More