Home இலங்கை அஞ்சல் பணியாளர்களின் போராட்டம் தொடர்பில் யாழ் பல்கலை ஊழியர் சங்கம்…

அஞ்சல் பணியாளர்களின் போராட்டம் தொடர்பில் யாழ் பல்கலை ஊழியர் சங்கம்…

by admin

சம்பள உயர்வுதனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்புதவறான சுற்றுநிரூபத்திற்கு எதிர்ப்பு என ல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துஅஞ்சல் பணியாளர்கள் 11-06-2018 முதல் தொடர்ந்துகொண்டிருக்கும் தொழிற்சங்கப் போராட்டம் 10வது நாளாக இன்றும் தொடர்கின்றமைஅனைவரும் அறிந்ததேஅது கவலைக்குரிய விடயமாகும்.

தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு வேண்டி தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடும் அஞ்சல் பணியாளர்களிற்கும்தொழிற்சங்கங்களிற்கும் தொழிற்சங்கம் என்ற வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊழியர் சங்கமாகிய நாங்கள் தார்மீக ரீதியிலானஆதரவினை தெரிவிப்பதோடு அவர்களின் நியாயமான கோரிக்ககைள் வென்றெடுக்கப்படவேண்டும் எனவும் விரும்புகின்றோம்.

நல்லாட்சி அரசாங்கமானதுஅஞ்சல் பணியாளர்கள் தமது தொழில் உரிமைகளை வேண்டிப் போராடுகின்றனரே ஒழி தமது தமதுதனிப்பட்ட நலன்களுக்காகவல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்தொழில் உரிமைகளுக்காகப் போராடும் அஞ்சல் பணியாளர்களிற்குநியாயமான தீர்வினை வழங்குவதற்குப் பதிலாக தமது இரும்புக் கரம் கொண்டு அதிகாரப் பலத்தின்மூலம் அவர்களை வேலைக்குவரப்ணிப்பதினையும் அச்சுறுத்துவதினையும் கண்டிக்கின்றோம்

எனவே நல்லாட்சி அரசாங்கமானது இப்போராட்டத்தினை நியாயபூர்வமாக அணுகி விரைந்து தீர்வினை வழங்கி அஞ்சல் பணியாளர்கள்பணிக்குத் திரும்ப ஆவன செய்ய வேண்டுகின்றோம்.

நன்றி
த.சிவரூபன்
இணைச்செயலாளர்

பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
யாழ்ப்பாணம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More