Home உலகம் ஊபர் நிறுவனத்துக்கு லண்டனில் விதிக்கப்பட்டிருந்த தடை  நீக்கப்பட்டுள்ளது…

ஊபர் நிறுவனத்துக்கு லண்டனில் விதிக்கப்பட்டிருந்த தடை  நீக்கப்பட்டுள்ளது…

by admin

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பிரபல வாடகைக் கார் நிறுவனமான ஊபர் நிறுவனத்துக்கு லண்டனில் விதிக்கப்பட்டிருந்த தடை  நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நிறுவனம் 15 மாதங்ளுக்கு இயங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலும் செயல்பட்டு வருகின்ற இந்நிறுவனம் இயங்குவதற்கு அந்தந்த நாட்டு அரசிடம் அனுமதி பெற்று உரிமம் பெற வேண்டும்.

இந்தநிலையில் லண்டனில் இந்நிறுவனத்தின் உரிமம் கடந்த செப்டம்பர் 30-ம் திகதியுடன் காலாவதியானதையடுத்து, உரிமத்தை புதுப்பிக்க போக்குவரத்து ஒழுங்குமுறை துறை மறுப்பு தெரிவித்திருந்தது.

ஊபரின் அணுகுமுறை மற்றும் நடத்தையானது அந்நிறுவனத்தின் பெருநிறுவன பொறுப்பில்லாமையை நிரூபிக்கின்றது எனவும் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இல்லை எனவும் தெரிவித்து உரிமத்தினை புதுப்பிக்க மறுத்தமையினால் லண்டன் நகரில் இந்நிறுவனம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உபேர் நிறுவனம் சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை சரிசெய்துவிட்டதாகவும், அணுகுமுறையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனையடுத்து அதன் மீதான தடையை நீதிபதி ரத்து செய்துள்ளார். மேலும், இன்னும் 15 மாதங்கள் லண்டனில் இயங்க ஊபர் நிறுவனத்துக்கு அனுமது வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More