Home இலங்கை ஹிட்லரின் அண்ணனுக்கு உதயங்கவுடன் தொடர்பிருக்கிறது – மகேந்திரனுடன் எனக்கு தொடர்பில்லை…

ஹிட்லரின் அண்ணனுக்கு உதயங்கவுடன் தொடர்பிருக்கிறது – மகேந்திரனுடன் எனக்கு தொடர்பில்லை…

by admin

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகிய பின்னர் தான் அர்ஜூன் மகேந்திரனிடம் எந்த தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என்பதால், அவரை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மிக் விமான கொடுக்கல் வாங்கலில் நடந்த பாரிய நிதி மோசடி சம்பந்தமாக சர்வதேச பிடியாணை பிறக்கப்பிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான இலங்கை முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுடன் தற்போதும் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ள ஹிட்லரின் சகோதரருக்கு வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வர எந்த தடைகளும் இல்லை என பிரதமர் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்கள் சிலரிடம் கூறியுள்ளார்.

ஹிட்லரின் அண்ணனுக்கு உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு கொண்டு வர முடியாவிட்டால், அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மூலம் சர்வதேச காவற்துறையினர் அவரை கைதுசெய்து இலங்கையிடம் ஒப்படைப்பார்கள் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளவருடன் ஹிட்லரின் சகோதரர் தொடர்ந்தும் தொடர்புகளை கொண்டிருந்தாலும் எந்த வகையிலும் அவரை இலங்கைக்கு கொண்டு வர ஒத்துழைக்க மாட்டார் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கோத்தபாய ராஜபக்சவையே ஹிட்லர் என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More