Home இலங்கை சுழிபுரம் சிறுமியின் கொலை – ஒருவருக்கு வலை வீச்சு….

சுழிபுரம் சிறுமியின் கொலை – ஒருவருக்கு வலை வீச்சு….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


சிறுமி கொலை வழக்கில் பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் தலைமறைவாக உள்ளதாக வட்டுக்கோட்டை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

“சிறுமி கொலை தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்தில் ஆறு பேரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தோம். அதன் போது பிரதான சந்தேக நபர் ஒருவரை அடையாளம் கண்டு அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தோம்.

அந்த விசாரணைகளில் ஊடாக சிறுமியின் சீருடை மறைத்து வைத்திருந்த இடத்தினை கண்டு பிடித்தோம். சிறுமியின் தோட்டை மீட்க முடியவில்லை. பிரதான சந்தேக நபர் எமக்கு அளித்த வாக்கு மூலத்தில் தான் தனியாகவே இக் கொலையை செய்தேன் என ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

ஏனைய ஐந்து பேரிடமும் மேற்கொண்ட விசாரணைகளில் இருவர் நேரடி சாட்சியமாக உள்ளனர். அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது , பிரதான சந்தேக நபரும் , மற்றுமொரு நபரும் இணைந்து குறித்த சிறுமியை கொலை சம்பவம் நடந்த அன்றைய தினம் மாலை அழைத்து சென்றதனை கண்டுள்ளார்.

அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் , பிரதான சந்தேக நபருடன் சிறுமியை அழைத்து சென்ற நபரை அடையாளம் கண்டுல்லோம். அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை தேடி கைது செய்வதற்கான நடவடிக்கைளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றோம்” என தெரிவித்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More