Home இலங்கை மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் – 12 சந்தேக நபர்களுக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் – 12 சந்தேக நபர்களுக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

by admin


யாழ் மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று அவர்கள் முற்படுத்தப்பட்ட போதே நீதிவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக அண்மையில் இடம்பெற்ற குழு மோதலை அடுத்து , மோதலை தவிர்க்க சென்ற காவல்துறை உத்தியோகஸ்தர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் குழு மோதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் இளைஞன் உயிரிழந்ததை அடுத்து குழப்பங்களில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More