Home இலங்கை முள்ளியவளையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இளைஞரின் சடலம் மீட்பு….

முள்ளியவளையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இளைஞரின் சடலம் மீட்பு….

by admin

முல்லைத்தீவின் முள்ளியவளை பகுதியிலுள்ள காட்டிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும் முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் தலைப்பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்தே சடலம் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மிருக வேட்டையின் போது துப்பாக்கி வெடித்து சிதறியதில் இளைஞரின் முகம் மற்றும் தலைப் பகுதியில் காயம் எற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More