Home இலங்கை அரசாங்கத்தின் பங்காளி கட்சியே கூட்டமைப்பு…

அரசாங்கத்தின் பங்காளி கட்சியே கூட்டமைப்பு…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


அரசாங்கத்தின் பங்காளி கட்சியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி எனும் பெயரில் அரசின் பங்காளி கட்சியாகவே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சியாக இருந்து வடக்கு மக்களுக்கோ தெற்கு மக்களுக்கோ எதனையும் செய்யவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று தருமாறு கோரிய போது , தான் அரசாங்கத்திடம் வேலை வாய்ப்பு கோர மாட்டேன். அரசியல் தீர்வையே கோருவேன் என பதிலளித்து உள்ளார். ஆனால் இதுவரையில் தமிழ் மக்களுக்கு அவர் வேலை வாய்ப்புகளையோ , அரசியல் தீர்வையோ பெற்றுக்கொடுக்க வில்லை.

தொடர்ந்து தமிழ் மக்களை மாத்திரமன்றி நாட்டில் உள்ள அனைத்து இன மத மக்களையும் ஏமாற்றி வருகின்றார். இந்த நாட்டு மக்களுக்காக எதிர்கட்சியாக இருந்து எதனையும் பெற்றுக்கொடுக்க வில்லை. என தெரிவித்தார்.

எமது நாட்டு பிரச்சனையை நாமே தீர்க்க வேண்டும். தரகர்கள் தேவையில்லை…

எமது நாட்டு பிரச்சனையை நாமே தீர்க்க வேண்டும். தரகர்கள் தேவையில்லை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , எமது நாட்டு பிரச்சனையை நாம் தான் தீர்க்க வேண்டும். அமேரிக்கா , இந்தியா என அந்த நாட்டு பரிந்துரைகளையும் , அவர்களின் சிபாரிசுகளையும் கொண்டு எமது நாட்டு பிரச்சனையை தீர்க்க முடியாது. அவர்களை நம்பி எந்த பயனும் இல்லை எமது நாட்டு பிரச்சனையை எமது நாட்டில் வாழும் மக்கள் இணைந்தே தீர்க்க முடியும் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More