Home இலங்கை சட்டம் ஒழுங்கு அமைச்சர் வடமாகாண ஆளுநருடன் யாழ் நிலைமைகள் குறித்து கலந்துரையாடல்(படங்கள்)

சட்டம் ஒழுங்கு அமைச்சர் வடமாகாண ஆளுநருடன் யாழ் நிலைமைகள் குறித்து கலந்துரையாடல்(படங்கள்)

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யுhழ்ப்பாணம் சென்றுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் காவல்துறைமா அதிபர் ஆகியோர் யாழ்ப்பாண நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பு இன்று இரவு யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவுள்ள ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது..

இச் சந்திப்பில் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவரது செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பிரதி அமைச்சர் நளின் பண்டார ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற வாள்வெட்டு, கொள்ளை, துஸ்பிரயோகங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இதனைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More