Home இந்தியா உத்தரப்பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து-இருவரது உடல்கள் மீட்பு – 50 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அச்சம் :

உத்தரப்பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து-இருவரது உடல்கள் மீட்பு – 50 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அச்சம் :

by admin

உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் அதன் அருகாமையில் இருந்த 4 மாடி கட்டிடமும் சேர்ந்து இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.

மேலும் குறித்த 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்த 18 குடும்பங்களை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருபவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More