Home இலங்கை பாடசாலைப் பரீட்சைகளிலும் இராணுவமா? –

பாடசாலைப் பரீட்சைகளிலும் இராணுவமா? –

by admin

உயர்தரப் பரீட்சையில் இராணுவத்தின் உதவியை நாடுகிறது பரிட்சைத் திணைக்களம்! – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

பரீட்சை மத்திய நிலையங்களுக்குக் கொண்டுவரப்படும் தொலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை முறைகேடுகளைத் தவிர்க்கும் நோக்கில், அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் மேலதிக நிலையப் பொறுப்பதிகாரியொருவரை நியமிக்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிணங்க குறித்த மேலதிக நிலையப் பொறுப்பதிகாரி ஊடாக பரீட்சைக் கண்காணிப்புக்கள் மேற்பார்வை செய்யப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் இப்பரீட்சை செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சையில் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 21 ஆயிரத்து 469 பேர் தோற்றவுள்ளனர். 2,267 பரீட்சை மத்திய நிலையங்கள் மற்றும் 311 ஒருங்கிணைப்பு மையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

இது தவிர, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இப்பரீட்சையில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலம் மூன்று இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றவுள்ளனர். இப் புலமைப்பரிசில் பரீட்சை 3,050 பரீட்சை மத்திய நிலையங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More