Home இந்தியா இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் கடற்கரை மணலில் கஞ்சா பதுக்கல் – மூவர் கைது ( வீடியோ இணைப்பு )

இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் கடற்கரை மணலில் கஞ்சா பதுக்கல் – மூவர் கைது ( வீடியோ இணைப்பு )

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கைக்கு கடத்துவதற்க்காக ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே சீனியப்ப தர்ஹா கடற்கரை மணலில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 50 இலட்சம் மதிபுள்ள கேரளா கஞ்சா பொதிகளை இன்று (18பறிமுதல் செய்த ) கீயூ பிரிவு காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளனர்.

இலங்கைக்கு கேரளா கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் தனி பிரிவு காவல்துறை அதிகாரி ராஜ் குமாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மூவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இலங்கைக்கு கடத்துவதற்க்காக கடற்கரை மணலில் கஞ்சா பொதிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அப்பகுதியை தோண்டிய காவல்துறையினர் 152 கஞ்சா பொதிகளை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளில் மொத்தமாக 304 கிலோ கஞ்சா காணப்பட்டுள்ளது. அதனை கைபற்றிய காவல்துறையினர் கடத்தல்காரர்கல் மூவரையும் கைது செய்து மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரண நடத்தி வருகின்றனர்.

சமிபகாலமாக ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளிலிருந்து போதைப்பொருள்கள் இலங்கைக்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது .குறிப்பாக இந்த வராத்தில் 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா மற்றும் 50 லட்சம் மதிப்பிலான கடல் குதிரைகள் தமிழக மற்றும் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More