Home இலங்கை கோத்தாபய உள்ளிட்டோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு

கோத்தாபய உள்ளிட்டோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு

by admin


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலேயே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து அனைத்து அறிக்கைகளும் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற விசாரணையின் போது தெரிவித்த நிதி மோசடி விசாரணைப் பிரிவு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதற்காக பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விடுத்த கோரிக்கைக்கமைய இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More