Home இந்தியா மோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் :

மோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் :

by admin

பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது மோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.  இந்திய மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசினார்.

தனது உரையை முடித்த பின்னர், யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்ற ராகுல் காந்தி, மோடியை கட்டிப் பிடித்துள்ளார். பதிலுக்கு மோடியும் சிரித்துக் கொண்டே ராகுல் காந்தியின் கையை பிடித்து குலுக்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறுகையில், அவையில் மாண்புகள் நிச்சயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். வெளியில் இருந்து வந்து யாரும் அவைக்கு பாதுகாப்பு தரமுடியாது. அவையில் இருக்கும் நீங்கள் தான் இதற்கு முழு பொறுப்பு என தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More