Home இந்தியா நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடே சிறந்த இடம் :

நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடே சிறந்த இடம் :

by admin

பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் நிநியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடே சிறந்த இடம் என மாநிலங்களவையில் இந்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக மக்கள் அபாரமான ஆதரவு தெரிவித்து உள்ளதனால் இத் திட்டம் அமைப்பது தொடர்பாக 2010 ஆம் ஆண்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

அத்துடன் இதுகுறித்து தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றுள்ளது.நில அதிர்வு, குறைந்த அளவிலான சுற்றுச்சூழல் தாக்கம், புவியியல் குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடே சிறந்த இடமாக விளங்குகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More