Home இலங்கை பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் சம்பந்தனை சந்திக்கவுள்ளார்…

பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் சம்பந்தனை சந்திக்கவுள்ளார்…

by admin

இலங்கைக்கு சென்றுள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்டிற்கும், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையே சந்திப்பொன்று, நாளை வெள்ளிக்கிழமை, நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக எதிர்கட்சி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சென்றுள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் நேற்றையதினம் (01.08.18) பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்தித்திருந்தார். எவ்வாறாயினும், குறித்த சந்திப்புகளின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகமாக பதவியேற்றுக் கொண்ட பெட்ரீசியா ஸ்கொட்லன், தனது பதவியேற்பின் பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட முதலாவது சந்தரப்பமாக இந்தப் பணயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More