Home உலகம் டென்மார்க்கில் பொது வெளியில் புர்கா அணிந்த பெண்ணுக்கு அபராதம்

டென்மார்க்கில் பொது வெளியில் புர்கா அணிந்த பெண்ணுக்கு அபராதம்

by admin

டென்மார்க்கில், பொதுவெளியில் முகத்தை மறைப்பது போன்று முக்காடு அணிந்த பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பெண்கள் பொது வெளியில் முகத்தை மறைப்பது போன்று உடை அணிவதற்கு தடை அந்நாட்டில் கடந்த புதன்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில் 28 வயதான பெண் ஒருவருக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

டென்மார்க் பாராளுமன்றத்தின் இந்த புதிய சட்டத்தில் புர்கா அல்லது நிக்காப் என் குறிப்பிடப்படவில்லை என்ற போதிலும் பொது வெளியில் முகத்தை மூடுவது போன்று உடை அணிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

டென்மார்க்கின் இந்தச்சட்டத்திற்கு மனித உரிமை அமைப்புக்கள் ; எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More