Home இலங்கை எதிர்கட்சித் தலைவர் இழுபறிக்கு நாளை பதில் – சம்பந்தரே தொடருவார்?

எதிர்கட்சித் தலைவர் இழுபறிக்கு நாளை பதில் – சம்பந்தரே தொடருவார்?

by admin

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். குறித்த தீர்மானத்தை நாளை நடைபெற உள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் சமர்பிக்க உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தனே தொடர்ந்தும் எதிர்கட்சித் தலைவராக இருக்க முடியும் எனவும், அரசாங்கத்தில் அமைச்சுப்பொறுப்புகளை ஏற்க்கொண்டுள்ள கட்சிக்கோ இணைக் கட்சிக்கொ அதனை வழங்க முடியாது என்ற தீர்மானமே நாளை அ றிவிக்கப்படலாம் என எதிர்பாரக்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பிலான தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது…

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இன்று (06) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More