Home இலங்கை மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி செயற்திட்ட முறைகேடுகள் குறித்து முறைப்பாடு செய்ய விசேட பிரிவு :

மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி செயற்திட்ட முறைகேடுகள் குறித்து முறைப்பாடு செய்ய விசேட பிரிவு :

by admin

மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகளில் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக உறுதியான தகவல்கள் சாட்சியங்களுடன் காணப்படுமாயின் அது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 23 ஆம் திகதி இடம்பெற்ற களுகங்கை நீர்த்தேக்கத்தின் மங்கள நீர் நிரப்பும் விழாவின்போது இந்த விசேட பிரிவினை துரிதமாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டதற்கமைவாகவே இந்த விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 011 2034159 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அல்லது 011 – 2879976 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாக சாட்சியங்களுடன் கூடிய தகவல்களை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ‘பணிப்பாளர் – விசாரணைகள், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, சொபாதம் பியச, இல. 416ஃ சீஃ1, ரொபட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்ல’ என்னும் முகவரியில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.

23,000 கோடி ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இந்த நாட்டின் பாரிய பல்நோக்கு அபிவிருத்தி செயற்திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகளை எவ்வித முறைக்கேடுகளுமின்றி முறையாகவும் வினைத்திறனாகவும் நிறைவு செய்து, அதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More