Home இலங்கை சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தமூலம் தூக்கியெறியப்பட்ட மலையகத் தமிழரை அரவணைத்தவர் கலைஞர்.

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தமூலம் தூக்கியெறியப்பட்ட மலையகத் தமிழரை அரவணைத்தவர் கலைஞர்.

by admin


இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பு செய்த மலையக மக்கள் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் ஊடாக திருப்பி அனுப்பப்பட்ட போது, அவர்களை வரவேற்று இந்தியாவில் மறுவாழ்வளித்த விடயத்தில் கலைஞர் கருணாநிதிக்கு  பெரும் பங்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மறைந்த தி.மு.க. தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கு இலங்கை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தின் போது, முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்குக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றிய திலகராஜ்,
கடலில் துடித்துக்கொண்டிருந்த மீனை வெளியில் தூக்கி எறிந்ததைப் போன்ற நிலை இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கு ஏற்பட்டபோது, அவர்களுக்கு கரம் கொடுத்த பெருமை கலைஞரையே சாருமென தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More