Home இலங்கை யாழ் நீர்வேலி வாள்வெட்டு – தேடப்பட்டவர் காவற்துறையில் சரணடைந்தார்..

யாழ் நீர்வேலி வாள்வெட்டு – தேடப்பட்டவர் காவற்துறையில் சரணடைந்தார்..

by admin

யாழ்ப்பாணம் நீர்­வேலி வாள்­வெட்டுச் சம்­ப­வத்தில் தொடர்புபட்டவர் என்ற குற்­றச்­சாட்­டில் தேடப்­பட்டு வந்­த­வ­ர் சரணடைந்த நிலையில்  கைது செய்­யப்பட்டு உள்­ளதாக காவற்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த  சந்தேக நபரை விளக்கமறியில் வைக்க நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.

யாழ்ப்பாணம் நீர்­வேலி செம்­பாட்டு பிள்­ளை­யார் ஆலயத்திற்குள் கடந்த மே மாதம் இடம்பெற்ற வாள்­வெட்டு சம்பவத்தில் அப் பகுதியை  சேர்ந்த இரு­வர் காயமடைந்திருந்தனர்.  இந்த சம்பத்துடன் தொடர்புடையவர்களாக கூறப்பட்டு இணு­வில் தாவடி  போன்ற பகுதிகளை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்­கள் தொடர்ந்­தும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இச் சம்பத்துடன் தொடர்புடைய ஏனையோரை காவற்துறையினர்  தேடி வரும் நிலையில் சந்தேகநபர்  சட்­டத்­த­ரணி ஒரு­வர் மூல­மாக யாழ்ப்­பாண நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

எனி­னும் அவ­ரைப் காவல் நிலை­யத்­தில் சர­ண­டை­யு­மாறு நீதி­வான் தெரி­வித்­த­தை­ய­டுத்து நேற்று முன்­தி­னம் அவர் காவல்  நிலை­யத்­தில் சட்­டத்­த­ரணி ஊடாக சரணடைந்தார். அத்துடன் குறித்த நபர் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இவர்  சார்பில் முன்னிலையான சட்­டத்­த­ரணி பிர­தீ­பன், சந்­தே­க­ந­ப­ருக்­கும் வாள்­வெட்­டுச் சம்பவத்திற்கும் தொடர்­பில்லை என்றும் நண்பர் ஒருவரை சந்திக்கவே அவ் இடத்திற்குச் சென்றதாகவும் கூறினார்.

வழக்கை ஆராய்ந்த யாழ்ப்­பாண நீதி­மன்ற மாவட்ட நீதி­ப­தி­யும் மேல­திக நீதி­வா­னு­மா­கிய வி.இரா­மக்­க­ம­லன், சந்­தேக நபரை இன்­று­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு  உத்தரவிட்டார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More