Home இலங்கை முசலியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயை காணவில்லை :

முசலியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயை காணவில்லை :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொக்குப்படையான் சிலாபத்துறை கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான தனது மனைவி கடந்த 6 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கணவர் அன்றைய தினம் இரவு சிலாபத்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 33 வயதுடைய ஏ.லூர்து சுறாங்கனி  எனும் மூன்று பிள்ளைகளின் தாயே காணமல் போயுள்ளதாக கணவர் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் கொக்குப்படையான் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து முருங்கன் வைத்தியசாலைக்குச் சென்ற இவர் வீடு திரும்பாத நிலையில் அன்றைய தினம் இரவு 10 மணியளவில் கணவர் சிலாபத்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போன மூன்று பிள்ளைகளின் தாயான 33 வயதுடைய  ஏ.லூர்து சுறாங்கனி என்பவர் தொடர்பாக  தகவல் தெரிந்தவர்கள் 0776353945 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கணவர் அன்ரனி ஜெயராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More