Home உலகம் இத்தாலியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 8 பேர் பலி

இத்தாலியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 8 பேர் பலி

by admin


கனமழை காரணமாக இத்தாலியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலரை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  கனமழை காரணமாக சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் செல்லும் கேலாப்ரியா மாகாணத்தில் அமைந்துள்ள பொலினோ தேசிய பூங்காவில் உள்ள ஓடையை பார்ப்பதற்காக சுற்றுலாப்பயணிகள் சென்றுள்ள நிலையில் ஓடைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதனால் சுற்றுலாப் பயணிகள் 8 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும், 18 பேர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் தகவல் தெரிவிக்காமல் இப்பகுதிக்கு சென்றுள்ளதால் மொத்தம் எத்தனை பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் என்ற விவரங்கள் வெளியாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More