Home இலங்கை சிங்கள மக்கள் குடியேற்றம் தொடர்பில் சத்தியமாக எதுவும் தெரியாது…

சிங்கள மக்கள் குடியேற்றம் தொடர்பில் சத்தியமாக எதுவும் தெரியாது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

மகாவலி அதிகாரசபை முல்லைத்தீவு மாவட்டத்தில் அடாத்தாக குடியேறியுள்ள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை வழங்கியதா? என்பது தொடர்பில் நான் எதனையும் அறியவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் அதனை நான் தடுத்து நிறுத்துவேன். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நானும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தனும் ஜனாதிபதியான உங்களை சந்தித்தபோது மகாவலியூடாக தண்ணீரை கொண்டுவருவதற்கு முன்னர் சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றாதீர்கள் என கேட்டிருந்தோம். எங்களுடைய மக்களுக்கு சொந்தமான மண்ணை வேறு யாருக்கும் தாரைவார்க்காதீர்கள் என கேட்டோம். இன்று எங்களுடைய மண்ணில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் பொறுப்பாக இருக்கும் மகாவலி அதிகாரசபை வழங்கியுள்ளது. நாங்கள் இப்போதும் கேட்கிறோம் எங்கள் மக்களுக்கு சொந்தமான மண்ணை வேறு யாருக்கும் தாரை வார்க்காதீர்கள். என உரையாற்றி இருந்தார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மகாவலி அதிகாரசபை அவ்வாறு காணிகளுக்கான உத்தரவு பத்திரங்களை வழங்கியதாக நான் அறியவில்லை. அப்படி நடந்திருந்தால் அதனை நான் உடனடியாக தடுத்து நிறுத்துவேன்.

இவ்வாறான பிரச்சினைகள் குறித்து நாங்கள் மிகுந்த புரிந்துணர்வுடன் நடந்து கொண்டிருக்கின்றோம். இனிவரும் காலங்களிலும் இவ்வாறன பிரச்சினைகளில் மிகுந்த புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More