Home இலங்கை யுத்தம் முடிந்த பின்னரும் இராணுவ கட்டுப்பாடு நிலவுவது வடக்கு மக்களை பிரித்தாளும் செயல்!

யுத்தம் முடிந்த பின்னரும் இராணுவ கட்டுப்பாடு நிலவுவது வடக்கு மக்களை பிரித்தாளும் செயல்!

by admin

யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கு மக்களின் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருப்பதும் அங்கு இராணுவக் கட்டுப்பாடு நிலவுவதும் வடக்கு மக்களை பிரித்தாளும் செயல் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடக்கு முதலமைச்சர் மற்றும் தெற்கின் சில அரசியல்வாதிகளும் தொடர்ந்து இனவாதம் பேசி அரசியல் செல்வாக்கு செலுத்துவதாக தெரிவித்த அவர் இவ்விடயம் ஒன்றும் புதிதல்ல என்றும் கூறினார். வடக்கு முதலமைச்சரின் பிரதான கோரிக்கை வடக்கு மக்களின் காணி விடுவிப்பு விடயத்திலே தங்கியுள்ளதாகவும் இந்திய மீனவர்கள் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்படுவது தொடர்பில் இவர் இதுரையில் எவ்விதமான கருத்துக்களையும் குறிப்பிடவில்லை என்றும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இராணுவம் வடக்கு மக்களின் காணிகளை தொடர்ந்து விடுவிக்காமல் இருப்பிது பாதிக்கப்பட்ட மக்களினை மேலும் பாதிப்புற செய்யும் விடயம் என சுட்டிக்காட்டிய அவர் பொருளாதார ரீதியில் இம்மக்கள் தொடர்ந்து பின்னடைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

அரசாங்கம் காணிகளை விடுவித்து விட்டதாக கூறுவதை, வடக்கு மக்கள் அது சர்வதேசத்தினை ஏமாற்றும் செயற்பாடு என்று குறிப்பிடுவதாகவும் மக்களின் கருத்துக்களே என்றும் குறிப்பிட்டார். அத்துடன் வடக்கு மக்கள் அரசாங்கத்திடம் புதிய காணிகளை கோரவில்லை அவர்களின் பூர்வீக காணிகளையே கேட்பதாகவும் அது இவர்களின் உரிமை என்றும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு எனக் கூறி அரசாங்கம் காணி விடுவிப்பினை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது தமிழ் மக்களின் மனங்களில் பெரும்பாண்மையினர் தொடர்பில் வேற்றுமையினை தோற்றுவிக்கும் செயல் என்றும் விடுதலை புலிகளின் போராட்டம் 2009 ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டமையால் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட காணிகளை இராணுவம் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு எவ்வித அவசியமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டால் மீண்டும் விடுதலை புலிகளின் இயக்கம் தோன்றும் என்று வதந்திகளை பரப்பி அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ள சிலர் முயற்சிப்பதாகவும் வடக்கு மக்களின் விடயத்தில் அரசியல் விடயங்களை மையப்படுத்தி செயற்படாமல் யதார்த்த நிலைமைகளுக்கு முன்னுரிமை வழங்கி தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்த அவர் இவ்விடயத்திற்கு மக்கள் விடுதலை முன்னியிணனர் ஆதரவினை வழங்குவார்கள் என்று மேலும் குறிப்பிட்டார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More