Home இலங்கை காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கும் பிணை வளங்க உத்தரவு….

காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கும் பிணை வளங்க உத்தரவு….

by admin

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்குமாறு விசேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அரசாங்க காலத்தில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையின் போதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் அவர் விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான போது குறித்த வழக்கை விசாரணை செய்த விஷேட மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளனர். காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கடந்த 2014 – 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் 24 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், 61 சாட்சியாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More