Home இலங்கை வவுனியாவில் 6 மாத காலத்தில் 30 ற்கும் மேற்பட்டோர் தற்கொலை…

வவுனியாவில் 6 மாத காலத்தில் 30 ற்கும் மேற்பட்டோர் தற்கொலை…

by admin

விழிப்புணர்வு ஸ்ரிக்கர் ஒட்டிய சில மணிநேரங்களில் மேலும் ஒருவர் தூக்கில் தொங்கினார்…


வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆறு மாதகாலப் பகுதிக்குள் 30 ற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளதாக வவுனியா காவல் நிலையத்தின் பிரதிப் காவற்துறை பொறுப்பதிகாரி குமாரசிங்க தெரிவித்தார்.

நேற்றையதினம் வவுனியா காவற்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளில் ஸ்ரிக்கர் ஒட்டும் விழிப்புணர்வு நிகழ்வின் போது கருத்து வெளியிட்ட அவர், கடந்த சில மாதங்களில் தற்கொலை செய்வது அதிகரித்து காணப்படுகின்றது. இந்த தற்கொலை செய்வதினை தடுத்து நிறுத்தும் முகமாகவே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கோடு ‘மனிதனை நம்பாதே தற்கொலை செய்யாதே’ என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை முச்சக்கரவண்டியில் ஒட்டப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேசத்தில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 30ற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் அதிகளவானவர்கள் தூக்கில் தொங்கியே தற்கொலை செய்துள்ளனர். தற்கொலையினை தடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவே முச்சக்கரவண்டியில் ஆரம்ப கட்டமாக தற்கொலையினை தடுக்கும் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டுவதாக தெரிவித்தார்.

வவுனியாவின் யுவதி தூக்கில் தொங்கி தற்கொலை…

வவுனியா- சாம்பல் தோட்டம் பகுதியில் நேற்றிரவு இரவு யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். சாம்பல் தோட்டம் ஜயப்பர் வீதியில் வசித்து வரும் 22வயதுடைய யுவதியே நேற்றிரவு தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி கொழும்பிலுள்ள ஆடை தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லுவதற்கு குடும்பதாரிடம் அனுமதி கோரியுள்ளார். கொழும்பு செல்வதற்கு குடும்பத்தினர் மறுத்த சமயத்தில் வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More