Home உலகம் அயர்லாந்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரிய போப் பிரான்ஸிஸ்

அயர்லாந்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரிய போப் பிரான்ஸிஸ்

by admin

திருச்சபைகளைச் சேர்ந்தவர்கள் மீதான பாலியல் குற்றங்களை விசாரித்து, குற்றவாளிகளை தண்டிக்காமல் திருச்சபைகள் மௌனமாக இருந்தமை வருந்ததக்கது எனவும் இதற்காக பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருகிறோம் எனவும் போப் பிரான்ஸிஸ் அயர்லாந்தில் தெரிவித்துள்ளார்.

39 ஆண்டுகளுக்கு பின்னர் அயர்லாந்து சென்றுள்ள போப் பிரான்ஸிஸ் அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கூட்டத்தில் பேசியபோதே இதனைத் தெரிவித்துள்ளார். அயர்லாந்தில் கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்த முறைப்பாடுக்குள்ளாகியிருப்பது வேதனையளிக்கிறது. குழந்தைகளுக்கு கிறிஸ்தவ மதகுருக்களால் ஏற்பட்ட பாலியல் தொந்தரவு பெரிய அவப் பெயரை ஏற்படுத்தி விட்டன. கத்தோலிக்க திருச்சபைகள் உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டன. இது என்னை வெட்கப்பட செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபற்றி பேசாமல் தவிர்த்து விட முடியாது. பேராயர்கள், மதகுருக்கள் உள்ளிட்ட திருச்சபை ஊழியர்கள் இதுபோன்ற முறைப்பாடுகள் எழும்போது சரியான நடவடிக்கை எடுக்காததால் திருச்சபைகள் மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்கு வலியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதை எண்ணி நான் கவலை கொள்கிறேன். இதற்காக பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் தேவாலயங்களில் நடைபெறாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போப் பிரான்ஸிஸ் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More