Home இலங்கை விக்கியை மட்டுமே யுத்த நினைவுச் சின்னங்கள் உறுத்துகின்றன – பொதுமக்களை அல்ல…

விக்கியை மட்டுமே யுத்த நினைவுச் சின்னங்கள் உறுத்துகின்றன – பொதுமக்களை அல்ல…

by admin

வடக்கில் புதிய இனக் குடியேற்றத்தை உருவாக்கும் எந்தத் தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர இதனைத்; தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் அண்மைய உரை தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் வட மாகாணத்தில் யுத்த நினைவு சின்னங்கள் இருப்பது விக்னேஸ்வரனுக்கு மாத்திரமே பிரச்சினையாக உள்ளது எனவும் மக்களுக்கு அல்லவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடுகள், காணிகள், வேலையின்மை போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More