Home இலங்கை இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறியவர் சிறைக்கு – இலஞ்சம் பெற்றவர் நெடுந்தீவிற்கு…

இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறியவர் சிறைக்கு – இலஞ்சம் பெற்றவர் நெடுந்தீவிற்கு…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

காவற்துறையினர் இலஞ்சம் பெறுகின்றனர் எனத் தெரிவித்து மரத்தில் ஏறி போராட்டம் நடத்திய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று 03-09-2018 காலை ஒன்பது முப்பது மணிக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற வேளை . மேடைக்கு நேர் எதிராக ஏ9 பிராதான வீதியின் ஓரமாக காணப்பட்ட பூவரசு மரத்தில் இருந்து முதியவர் கையில் ஒரு பதாகையை வைத்துக்கொண்டு உரத்த குரலில் சத்திமிட்டுக்கொண்டிந்தார்

இதனை கையில் வைத்திருந்த முதியவர் காவற்துறையினர் இலஞ்சம் வாங்குவதாகவும், குறிப்பாக கிளிநொச்சி காவற்துறை நிலையத்தில் உள்ள ( ஒருவரின் பெயரை குறிப்பிட்டு) அவர் இலஞ்சம் பெறுவதாகவும் தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்

போராட்டம் நடத்திய அந்த முதியவரை காவற்துறையினர் நேற்று (03.09.18) கைது செய்துள்ளனர் நீதிமன்றத்தை அவமதித்ததுடன் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையுறு வழங்கியமை என்ற குற்றச் சாட்டிலையே குறித்த முதியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் முதியவரை இன்று(04) நீதவான் நீதிமன்றில் முற்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

மேலும் கிளிநொச்சி காவற்துறையினர் நிலையத்தில் உள்ள காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் (போராட்டம் நடத்திய முதியவர் குறிப்பிட்ட) இலஞ்சம் பெறுவதாகவும் முதியவரால் தெரிவிக்கப்பட்டதனை அடுத்து அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வடமாகாண சிரேஸ்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் றோசான் பெர்னாண்டோவினால் குறித்த காவற்துறை உத்தியோகத்தர் எவ்வித விசாரணைகளும் இன்றி இன்று காலை நெடுந்தீவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது.

கிளிநொச்சியில் பிரதம நீதியரசர், நீதி அமைச்சர் முன்னிலையில் முதியவர் இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறி போராட்டம்…

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More