Home இலங்கை கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு எதிரான 3 மனுக்களும் நீதிமன்றங்களால் நிராகரிப்பு….

கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு எதிரான 3 மனுக்களும் நீதிமன்றங்களால் நிராகரிப்பு….

by admin

கூட்டு எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு கொள்ளுப்பிட்டி காவற்துறைப் பிரிவில் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு…

கூட்டு எதிர்க்கட்சியினர் நாளைய தினம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்கு கொள்ளுப்பிட்டி காவற்துறைப் பிரிவில் தடை விதிக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டு மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி காவற்துறையினர்  தாக்கல் செய்த இந்த மனு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.  கூட்டு எதிர்க்கட்சியினர் நளைய தினம் “மக்கள் பலம் கொழும்புக்கு” என்ற கருப் பொருளில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.  இதனால் பொது மக்களில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், இதன்காரணமாக ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு கோரியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஒன்று கூட தடை விதிக்க முடியாது….

நாளை (05.09.18) கொழும்பில் மேற்கொள்ளப்பட உள்ள எதிர்ப்பு பேரணியின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஒன்று கூட தடை விதிக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.  கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.  ஜனாதிபதியின் பாதுகாப்பு மற்றும் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூட தடைவிதித்து உத்தரவிடுமாறு கோரி காவற்துறையினர் மனுத் தாக்கல் செய்தனர்.  கூட்டு எதிர்க்கட்சியினர் நாளைய தினம் “மக்கள் பலம் கொழும்புக்கு” என்ற கருப் பொருளில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பித்தக்கது.

கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டப் பேரணியை வெலிக்கட காவற்துறைப் பிரிவில் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு…

கூட்டு எதிர்க்கட்சியினர் நாளைய தினம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியை வெலிக்கட காவற்துறைப் பிரிவில் தடை விதிக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. காவற்துறையினர் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை நிராகரித்து கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டப் பேரணியால் மக்களின் அன்றாட நடவடிக்கைகக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More