Home இலங்கை யாழ்.சுழிபுரம்- சவுக்கடி கடற்கரையில் சருகு புலி சிக்கியது…

யாழ்.சுழிபுரம்- சவுக்கடி கடற்கரையில் சருகு புலி சிக்கியது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சவுக்கடி கடற்கரையில் மீனவர்கள் இறால் பிடிப்பதற்கான கூடுகளை வைப்பது வழக்கம். இவ்வாறு நேற்று மாலை கூடுகளை வைத்துவிட்டு சென்ற மீனவர்கள் இன்று காலை திரும்பவும் கடற்கரைக்கு வந்தபோது இறால் கூட்டுக்குள் சருகு புலி ஒன்றை கண்டுள்ளனர். இவ்வகை புலிகளின் நடமாட்டம் வன்னி காடுகளிலேயே அதிகம் உள்ளது. எனினும் யாழ்ப்பாணத்தில் இவற்றை பார்ப்பது அரிது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் குறித்த சருகு புலியை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More