Home இலங்கை குருந்தூர் மலைப்பகுதிக்கு தற்காலிக தடை – எவரும் செல்ல முடியாது…

குருந்தூர் மலைப்பகுதிக்கு தற்காலிக தடை – எவரும் செல்ல முடியாது…

by admin

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு – குருந்தூர் மலைப்பகுதிக்கு மதம் சார்ந்தவர்கள் உட்பட பொதுமக்கள் எவரும் செல்வதற்கு, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 04ஆம் திகதி குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்கும் நோக்கில் சென்ற பௌத்த பிக்குகள் உட்பட 12 பேர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
விசாரணையின் போது அவர்கள் அவர்கள் குருந்தூர் மலையில் முன்னர் இருந்த விகாரை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளதாக தெரிவித்து அது தொடர்பாக பூகோளவியல் பணிப்பாளர் கொடுத்துள்ள கடிதத்தையும் சமர்ப்பித்துள்ளதனையடுத்து விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து குருந்தூர் மலைக்கு மதம் சார்ந்தவர்கள் உட்பட பொதுமக்கள் எவரும் செல்வதற்கு தடை விதிக்க கோரி கடந்த 05ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணை கடந்த வியாழக்கிழமை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 13ஆம் திகதி வரை குறித்த மலைக்கு எவரும் செல்லமுடியாதவாறு தற்காலிக தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அத்துடன் விகாரை ஆய்வுக்காக பிக்குமார் செல்வதற்கு அனுமதிகொடுத்த பூகோளவியல் பணிப்பாளரின் கடிதத்தின் உண்மை தன்மையினை உறுதிப்படுத்துமாறும் தொல்பொருள் திணைக்களத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதுடன் வழக்கு விசாரணை 13ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More