Home இலங்கைகுடியிருக்காதவர்களின் வீடுகளுக்கு அறிவித்தல்

குடியிருக்காதவர்களின் வீடுகளுக்கு அறிவித்தல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரச நிதி ஒதுக்கீட்டின் கீழ் வீட்டுத்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு வீடுகளை அமைத்தவர்கள் அங்கு தொடர்ச்சியாக குடியிருக்காது வீடுகள் பயன்பாடற்று காணப்படுவதனால் இரண்டு வாரங்களுக்குள் குடியிருக்குமாறும் தவறும் பட்சத்தில் வீடற்றவர்களுக்கு வீடுகளை மாற்றி வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கரைச்சி பிரதேச செயலகத்தினால் பயன்பாடற்ற வீடுகளுக்கு முன் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்தின் மூலம் வீடுகளை பெற்றவர்களில் சிலர் வீடுகளை அமைத்துவிட்டு அங்கு குடியிருக்காது குறித்த வீடுகளை பயன்பாடற்ற வீடுகளாக விட்டுள்ளனர். இதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது எனவும் தொடர்ச்சியாக பலதரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் கரைச்சி பிரதேச செயகலத்தினால் இவ் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளன.

கரைச்சி பிரதேசத்தின் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் பயன்பாடற்ற வீடுகளுக்கு முன் குறித்த அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளன.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More