Home இலங்கை காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்பத்தினர் சர்வதேசத்திடம் கோரிக்கை மனுக்களை கையளித்துள்ளனர்

காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்பத்தினர் சர்வதேசத்திடம் கோரிக்கை மனுக்களை கையளித்துள்ளனர்

by admin


இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 தமிழ் இளைஞர்களின் குடும்பத்தினர் இன்று சர்வதேசத்திடம் தங்கள் கோரிக்கை மனுக்களை கையளித்துள்ளனர். கனேடிய தூதரகம், அமெரிக்க தூதரகம், ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம், பிரித்தானிய தூதரகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் காரியாலயம் ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் தங்களது மனுக்களை கையளித்துள்ளனர்.

மனுக்களை கையளித்ததனைத் தொடர்ந்து கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றிருந்த இந்த கடத்தல் சம்பவத்தை கண்டித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இல்லத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து சுவிஸ் தூதரகத்திற்கு சென்ற குடும்பத்தினர் அங்கு, தூதுவரின் பிரிதிநிதியிடமும் மனுவொன்றை கையளித்துள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு, கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் உள்ளிட்ட அறுவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, சுமார் 6 மாதகால விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More