Home இலங்கை “எங்கள் பிள்ளைகள் சாவதற்குள், அவர்களை மீட்ப்பதற்கு ஒத்துழைப்பு தாருங்கள்”

“எங்கள் பிள்ளைகள் சாவதற்குள், அவர்களை மீட்ப்பதற்கு ஒத்துழைப்பு தாருங்கள்”

by admin

தங்கள் விடுதலைக்காக உணவு அருந்தாமல் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் எங்கள் பிள்ளைகள் சாவதற்குள் அவர்களை மீட்டு கொடுப்பதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு தாருங்கள். அவர்கள் எங்களுக்கு உயிரோடு வேண்டும். என அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான உ ணவு தவிர்ப்பு போராட்டத்தினை நடாத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளான சுலக்சனின் சகோதரிகண்ணீர்மல்க கேட்டுள்ளனர்.யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அக்கோரிக்கையை விடுத்தனர்.

இதன்போது அரசியல் கைதியான சுலக்ஷனின் சகோதரி மோகனா தெரிவிக்கையில்,

எனது அண்ணா தற்போது ஐந்தாவது முறையாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார். ஒவ்வொரு முறையும் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுக்கும் போதும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு ஐந்து முறை கடந்த நிலையிலேயே தற்போது இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். அவர்களது உடல் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது எனவே அவர்களுக்கு விடுதலை அல்லது குறுகிய கால புணர்வாழ்வளித்து விடுதலை செய்யவேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும் என்றார்.

அரசியல் கைதிகளின் வழக்குகள் காலம் தாழ்த்தப்படுகிறது…

இதேவேளை இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதியான கோமகன் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளுடைய வழக்குகளானது தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டு வருவதுடன் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எதுவித ஆதாரங்களும் இல்லை. வெறுமனே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தினை அடிப்படையாகக் கொண்டே வழக்குகளை தாக்குதல் செய்துள்ளார்கள்.

இக் குற்ற ஒப்புதல் வாக்குமூலமும் அவர்களால் சுயமாக வழங்கப்படவில்லை. மாறாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினுடைய வற்புறுத்தலின் அடிப்படையிலேயே அச்சத்தின் காரணமாக  வழங்கப்பட்டதாகும்.

இவ்வாறான நிலையில் எமது வழக்குகளை விசாரணை செய்வதற்காக விசேட நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டபோதும் அங்கு தற்போது அரசியல் கைதிகளின் வழக்குகள் விசாரிப்பதற்கு பதிலாக வேறு வழக்குகளே விசாரணை செய்யப்பட்டு வருவதுடன் மீண்டும் அரசியல் கைதிகளின் வழக்குகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் எமது வழக்கு விசாரணைகளின் போது சட்டத்தரணிகளும் எம் சார்பாக முன்னிலையாவதில்லை.

நீண்ட காலத் தவணைகளும் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டு வழக்கு விசாரணைகள் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றன. இந்நிலையிலேயே அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அவ் அரசியல் கைதிகளே கடந்த ஐந்து தடவைகள் உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இருந்தபோதிலும் அவ் ஐந்து தடவைகளும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகளும் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். இவ்வாறான நிலையில் அவ் அரசியல் கைதிகளின் விடுதலையை முதன்மைப்படுத்தி அதற்கான ஆக்கபூர்வமான தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு யாழ். பல்கலைக்கழக சமூகம் தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியோர் முன்வரவேண்டும் என்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More