Home இந்தியா ஆந்திராவில், முன்னாள் – இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை…

ஆந்திராவில், முன்னாள் – இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை…

by admin


ஆந்திராவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர் ராவ் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசேரி சோமா ஆகியோரே இவ்வாறு மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இவர்கள் இருவரும் காரில் ஒன்றாக சென்ற போது இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உடன் சென்ற பாதுகாவலரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடாரி சர்வேஸ்வர் ராவ் ஏற்கனவே மாவோயிஸ்டுகளின் கண்காணிப்பில் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் துப்பாக்கிதாரிகளை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  சுட்டுக் கொல்லப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More