Home இலங்கை இடமாற்றம் வழங்கப்பட்ட இடங்களுக்கு வேலைக்கு செல்லாத வைத்தியர் – தாதிமாருக்கு சம்பளம் இடைநிறுத்தம்

இடமாற்றம் வழங்கப்பட்ட இடங்களுக்கு வேலைக்கு செல்லாத வைத்தியர் – தாதிமாருக்கு சம்பளம் இடைநிறுத்தம்

by admin


இடமாற்றம் வழங்கப்பட்டு புதிய இடங்களில் வேலைக்கு செல்லாத வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களுக்குரிய சம்பளத்தை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதாரச் செயலாளர் பீ.ஜீ.எஸ். குணதிலகவிற்கு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள வைத்தியர்கள்; மற்றும் தாதிமார்களை அவர்களுடைய பழைய பணி இடத்திலிருந்து விடுவிக்காத வைத்தியசாலை பணிப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் வைத்தியாசலைகளுக்கு வழங்கப்படுகின்ற நிதியுதவிகளை இடைநிறுத்தவும், வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது நிர்வாக திறமைகளுக்கு புள்ளி வழங்கும் போது இதுதொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More