Home இலங்கை யாழ். பல்கலைக்கழகத்தில் தியாகி திலீபனின் 31ஆவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது…

யாழ். பல்கலைக்கழகத்தில் தியாகி திலீபனின் 31ஆவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது…

by admin

 


தியாகி திலீபனின் 31ஆவது நினைவு தினம் யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று காலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.  யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் கி.கிருஸ்ணமீனன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் காலை 10.48 மணிக்கு பல்கலைக்கழகப் பதில் துணைவேந்தரும், விஞ்ஞான பீடாதிபதியுமான கலாநிதி பிரின்ஸ் ஜெயதேவன் பொதுச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.. அதனை தொடர்ந்து மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். தொடர்ந்து விரிவுரையாளர்கள், மாணவர்களின் நினைவுரைகள் இடம்பெற்றதுடன், தியாகி திலீபனின் அகிம்சைப் போராட்ட வரலாற்றை விளக்கும் காணொளிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More