Home இலங்கை மலேசியாவில் இருந்து பாங்கொக் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இலங்கையர் கைது…

மலேசியாவில் இருந்து பாங்கொக் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இலங்கையர் கைது…

by admin


போலிக் கடவுச்சீட்டை வைத்திருந்த இலங்கையர் ஒருவர் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. போலியான மலேசிய நாட்டு கடவுச்சீட்டு மூலம் பிரான்ஸ் நோக்கி புறப்பட முற்பட்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து இவர் தாய்லாந்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் போலிக் கடவுச்சீட்டை வைத்திருந்த 45 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் அதிகமானவர்கள் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More