Home இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில் இலங்கை தொடர்பான தீர்மானம் அகற்றப்பட வேண்டும்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில் இலங்கை தொடர்பான தீர்மானம் அகற்றப்பட வேண்டும்

by admin

அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகியுள்ள நிலையில் அமெரிக்காவினால் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் அகற்றப்பட வேண்டும் என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு சமாந்தரமாக நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரேரணையின் பிரதான அனுசரணையாளர் விலகியுள்ள நிலையில் இலங்கையின் இணை அனுசரணை நீர்த்துப் போகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்கிய தொழில்நுட்ப உதவியின் இறுதி பெறுபெறாக யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதே அமைந்திருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை இணை அனுசரணை வழங்கியதால் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டதாவும் அதற்கு ஜனாதிபதியினதோ அல்லது அமைச்சரவையினதோ அனுமதி கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரேரணையின் பிரதான அனுசரணையாளராக இருந்த அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் இருந்து விலகியதன் காரணமாக இலங்கையின் இணை அனுசரணை தானாகவே நீர்த்துப் போகும் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More