Home இந்தியா ரிட்லி புயல் வலுப்பெற்று கரையை கடந்துள்ளது.

ரிட்லி புயல் வலுப்பெற்று கரையை கடந்துள்ளது.

by admin

 

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள இன்று ரிட்லி புயல் தீவிரமாக ஒடிசா – ஆந்திரா இடையே, கோபால்பூரில் 140-150 கிலோ மீற்றர்வேகத்தில் கரையை கடந்துள்ளது.  வங்கக் கடலில் உருவாகியுள்ள ரிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே இன்று காலை கரையைக்கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கி.மீற்றர் வேகத்தில் காற்று வீசியதுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் புயலின் தாக்கம் தொடர்ந்து சில மெணித்தியாலங்கள் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக புயல் எச்சரிக்க விடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஒடிசாவின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருந்தனர்.  மேலும், ஒடிசா, ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு 1,000 தேசிய பேரிடர் மீட்புப் படையினரை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளதுடன் பாடசாலைகள் கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாள்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More