Home உலகம் ரோகிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பிமை தொடர்பில் இந்தியாவிடம் விளக்கம் கோரியுள்ள ஐநா :

ரோகிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பிமை தொடர்பில் இந்தியாவிடம் விளக்கம் கோரியுள்ள ஐநா :

by admin


இந்தியாவிலிருந்து ரோகிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவிடம் விளக்கம் கோரியுள்ளது. அடைக்கலம் தேடி வந்தவர்களை இவ்வாறு திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐ.நா வருத்தம் தெரிவித்துள்ளது.

மியன்மார் மற்றும் பங்களாதேசிலிருந்து ரோகிங்கியா முஸ்லிம்கள்  இந்தியாவிற்கு வந்து அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இந்தியாவில் உள்ள ஐ.நா. அகதிகள் முகமையின் புள்ளிவிபரங்களின் பிரகாரம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 18 ஆயிரம் ரோகிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஐ.நாவின் அகதிகளுக்கான ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் கைது நடவடிக்கைகள் மற்றும் நாடு கடத்தல்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக இவர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த அகதிகள் அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என இந்தியா தெரிவித்திருந்தது. அத்துடன் ரோகிங்கியா முஸ்லிம்கள் 7 பேர் மற்றும் மியன்மாரின் ரக்கின மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மியன்மாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐநா கவலை வெளியிட்டுள்ளது.

அடைக்கலம் தேடி வந்த ரோகிங்கியா முஸ்லிம்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மியன்மாருக்கு நாடு கடத்தியதற்கு ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையத்தின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More