Home இலங்கை ஜனாதிபதித் தேர்தல் குறித்து 9 ஆம் திகதிக்கு பின்னர் எந்த நேரத்திலும் அறிவிக்கலாம் :

ஜனாதிபதித் தேர்தல் குறித்து 9 ஆம் திகதிக்கு பின்னர் எந்த நேரத்திலும் அறிவிக்கலாம் :

by admin

அடுத்த ஜனாதிபதி தேர்தலை, தனது பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகி வருவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன், ஜனாதிபதி ஏற்கனவே ஆலோசனையை நடத்தியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பிற்கு அமைய தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் எதிர்வரும் 9ஆம் திகதியின் பின்னர், எந்த நேரத்திலும் தேர்தலுக்கான அறிவிப்பை அவர் வெளியிடலாம் எனவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் இந்தப் பின்னணியிலேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரை அவர் மாற்றியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்கேற்பவே, மாகாணங்களுக்கு ஆளுனர்களாக தனது ஆதரவாளர்களை நியமித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவும் சுதந்திரக் கட்சியும் இணைந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ நேற்று முந்தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More