Home இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் 4 தமிழக மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் 4 தமிழக மீனவர்கள் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டில் 4 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த குறித்த மீனவர்கள் படகொன்றில் இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த போது, காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் படகினையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வடமாகாண நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More