Home இலங்கை ஆட்சியை விரைவில் கைப்பற்றுவோம் :

ஆட்சியை விரைவில் கைப்பற்றுவோம் :

by admin

விரைவில் ஆட்சியை கைப்பற்றுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்து ஆளுங்கட்சி ஆசனத்தையும் கைப்பற்றுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பதவி ஆசை கொண்ட அரசாங்கம் எனவும் மக்களுக்கு சேவையற்றாது பதவி ஆசையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் அரசு ஈடுபடுவதாகவும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டு மக்களும் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற நிலையில் உள்ளதாகவும் தங்கள் மீதே அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தேர்தலை அரசாங்கம் விரைவாக நடத்தினால், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More